நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால் தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது. உணவின் தன்மையறிந்து, வகையறிந்து அளவோடு உண்ண, உணவே மருந்தாய் அமையும். அதில் பாகற்காய்க்கும் பங்கு உண்டு பாகற்காய் நீரிழிவு சிக்கல்களை தடுக்கிறது. நீரிழிவு நோய் உள்ளளவர்கள் பாகற்காயை உணவில் எடுத்தக்கொள்ள வேண்டும்.
பாகற்காய் சமையல்
என்னென்ன தேவை ?
பாகற்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி- 100 கிராம்
எண்ணெய் - 3 தேவைக்கேற்ப
கடுகு - 1 டீஸ்பூன்
உழுந்த பருப்பு - 1 டீஸ்பூன்
வற்றல்- 3
கருவேப்பிலை - 2 தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எப்படி செய்வது ?
பாகற்காய்களை சுத்தம் செய்து சிறிதாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, வற்றல், கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும். நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு பாகற்காய் சேர்த்து பிரட்டி,சிறிது உப்பு சேர்த்து ,மூடி 5 நிமிடம் வேக விடவும். திறந்து அத்துடன் தக்காளி சேர்த்து பிரட்டவும். எல்லாம் சேர்ந்து மசிந்து வரும். உப்பு சரி பார்த்து தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டவும் சுவையான பாகற்காய் பொரியல் ரெடி.கசப்பு தெரியாது.
Categories: மருந்தாகும் டயட் உணவுகள்
0 comments:
Post a Comment