நீரிழிவு நோயாளிகள் தானிய உணவு வகைகள் எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனால், இவற்றில் எவற்றையெல்லாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல; அவற்றை எந்த அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
கூழ் வகைகள் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லதல்ல. கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் நார்த்தன்மை அதிகம் இருப்பதால் அவற்றை உரிய முறையில் - உரிய அளவுகளில் உட்கொண்டு வரலாம்.
இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதோ, கூழாக தயாரித்து உண்பதோ நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும்போது பருப்பு வகைகளும், கீரை வகைகளும் கலந்த அடைகளாக தயாரித்து உண்ணலாம்.
அதிகமாக உணவு உட்கொண்டால் இன்சுலினை சுரக்கின்ற கணையம் சோர்வடைந்து விடக்கூடும். எனவே எந்த உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு குறைத்து உண்பதே நல்லது.
காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கி பொரி யல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3மண்டலம்நோய்க்குத் தக்க படி சாப்பிட்டு வருவது சிறப்பு.
வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்கா யத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வர கு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.
Categories: மருந்தாகும் டயட் உணவுகள்
0 comments:
Post a Comment