Monday, October 28, 2013

Posted by Unknown on 8:52 AM No comments


தேவையானப்பொருட்கள்:

காய்ந்த மிளகாய் - 6
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 முதல் 2 டீஸ்பூன் வரை

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு, நன்றாக பொடித்து எடுக்கவும்.

மேற்கூறிய அளவிற்கு, 5 அல்லது 6 பேருக்கு தேவையான குழம்பு தயாரிக்கலாம்.

எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்துக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் இந்தப் பொடியைச் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை, நல்லெண்ணையில் தாளித்துக் கொட்டினால், சுவையான வத்தக் குழம்பு தயார்.

அதிகமாக பொடித்து வைத்துக் கொண்டால், தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம்.
  ஆக்கம்- http://adupankarai.kamalascorner.com
Categories:

0 comments:

Post a Comment