Thursday, October 31, 2013

Posted by Unknown on 9:48 PM No comments

 
தேவையான பொருட்கள்....
 
கறுப்பு உளுந்து - 1 கைப்பிடி
கருப்பட்டி - தேவையான அளவு
 
செய்முறை...  
 
• கடாயில் கறுப்பு உளுந்தை போட்டு பொன்னிறமாகி, வாசனை வரும் வரை வறுத்து, அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
 
• பின்னர் கருப்பட்டி பாகு காய்ச்சி அதோடு உளுந்து மாவு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும்.
 
• தண்ணீர் படாமல் இருந்தால் 3 நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
 
குறிப்பு....
 
குழந்தைகளின் உடல் வளர்ச்சி, உறுதிக்கு தேவையான கால்சியம், புரோட்டீன் போன்றவை இதில் உள்ளது. பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை பலம் பெறும். இடுப்பு வலியும் வராது. ஆண்களுக்கு உடல் உறுதியை தருவதோடு, குழந்தையின்மை பிரச்சினைக்கு நல்ல தீர்வை தரும்.
 
ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஒருநாள் 50 கிராமுக்கு மேல் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் எளிதாக செரிக்காது. இது பெரும்பாலானவர்களால் விரும்பி உண்ணப்படுவது.

உளுந்து, கருப்பட்டி, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவற்றால் இது தயாரிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சத்தான இனிப்பு உணவு இது. இதை நீங்களே வீட்டில் தயாரித்து உண்ணலாம்.
Categories:

0 comments:

Post a Comment