உளுந்து - அரை கிலோ
பச்சரிசி - 150 கிராம்
கருப்பட்டி - முக்கால் கிலோ
நல்லெண்ணெய் - 100 மில்லி
உளுந்தை வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த உளுந்தில் பச்சரிசியைச் சேர்த்து மாவாக பொடித்துக் கொள்ளுங்கள். கருப்பட்டியை உடைத்துப்போட்டு பாகு காய்ச்சுங்கள். பாகின் அடியில் தங்கும் கழிவுகளை அரித்து எடுத்துவிட்டு மாவை சிறிது, சிறிதாகக் கொட்டி கிளறுங்கள். பின் நல்லெண்ணைய் ஊற்றி சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்குங்கள். சுவையும் மணமுமான உளுந்தங்களி ரெடி!
Categories: களி
0 comments:
Post a Comment