Thursday, October 31, 2013

Posted by Unknown on 10:15 PM No comments


தேவையானவை

வெந்தயக்கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
சாதம் - 11/2 கப்
வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறியது)
தக்காளி - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
கடுகு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு







செய்முறை


  • சாதத்தை உதிரியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

  • அதில் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

  • தக்காளி வெந்ததும், சாதம் சேர்த்து நன்கு கலக்கவும்.
அப்பளம், வடகம் அல்லது, சிப்ஸ் உடன் சாப்பிடலாம்.

0 comments:

Post a Comment